Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
எருமப்பட்டி: எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ராசிபுரம் நாமகிரிப்பேட்டை மசக்காளிபட்டியில் உள்ள ஸ்ரீ மகரிஷி வித்யா மந்திரி கல்வி நிறுவனம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான கோகோ குழு போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் நாமக்கல் சேலம் ஈரோடு ஆத்தூர் சிவகங்கை திருப்பூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 24 அணிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் இறுதிப் போட்டியில் எருமப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் சிவகங்கை மாணவர்களும் விளையாடினர்.
இதில் சிவகங்கை மாணவர்கள் முதலிடமும் எருமப்பட்டி பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடமும் பெற்றனர்.
இதில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களை எருமப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உதவி தலைமையாசிரியர் செந்தில் குமார் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சிவா உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில் நடராஜன் கீதா மற்றும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.